Saturday, March 17, 2012

கண்ணதாசனே கண்ணதாசனே



கண்ணதாசனே.. கண்ணதாசனே.. வந்துவிடு
என் காதல் கவிதையின் வரிகளை கொஞ்சம் திருத்திக்கொடு
கண்ணதாசனே.. கண்ணதாசனே.. வந்துவிடு
என் காதல் கவிதையின் வரிகளை கொஞ்சம் திருத்திக்கொடு
எழுதுகிறோம் பல பாடல்களை எங்கள் காதலுக்கு
இளம் உள்ளங்களில் அதன் எண்ணங்களில் சுகம் சேர்ந்திருக்கு
கண்ணதாசனே.. கண்ணதாசனே.. வந்துவிடு
என் காதல் கவிதையின் வரிகளை கொஞ்சம் திருத்திக்கொடு

உள்ளங்கை வேர்வை எந்தன் தோகை பேரை எழுதட்டும்
உள்ளங்கள் நாளும் நாளும் காதல் தேனில் நனையட்டும்

கண்ணுக்குள் ரேகை உண்டு காணவேண்டும் வா வா வா
பெண்ணுக்குள் பூவும் உண்டு தீயும் உண்டு நான் ரோசா

அம்மாடி அதிசய அபிநயம் அழகிய இதழ்களிலே..

ஆத்தாடி இளமையின் ரகசியம் பிறந்தது விழிகளிலே..

ராசாத்தி ரோசாப்பூ வளருது மலருது மயங்குது மனசு..
கண்ணதாசனே.. கண்ணதாசனே.. வந்துவிடு..
என் காதல் கவிதையின் வரிகளை கொஞ்சம் திருத்திக்கொடு

என்னென்ன கோலம் உண்டு ஜாதி உண்டு உன் கண்ணில்..
ஏழெட்டு நாகம் வந்து தீண்டுதம்மா என் நெஞ்சில்..

தித்திக்கும் பாலும் கொண்டு தேனும் கொண்டு நான் வாரேன்
ஒத்திகை தேவையில்லை ஒடி வந்து நான் தாரேன்..

வைகாசி பொறந்தது உனக்கு ஒரு மங்கல சேதி வரும்..

கைராசி இணைந்தது உனக்கு ஒரு நிச்சயம் தேதி வரும்..

ஆதாரம் நீயாக தினமொரு மனம் வரும் புன்னகை புரிந்திடு

கண்ணதாசனே.. கண்ணதாசனே.. வந்துவிடு
என் காதல் கவிதையின் வரிகளை கொஞ்சம் திருத்திக்கொடு
எழுதுகிறோம் பல பாடல்களை எங்கள் காதலுக்கு
இளம் உள்ளங்களில் அதன் எண்ணங்களில் சுகம் சேர்ந்திருக்கு

கண்ணதாசனே.. கண்ணதாசனே.. வந்துவிடு
என் காதல் கவிதையின் வரிகளை கொஞ்சம் திருத்திக்கொடு

திரைப்படம்: மரிக்கொழுந்து
இசை: சந்திரபோஸ்

No comments:

Post a Comment