Sunday, April 8, 2012

Oh Nenjame

உனை மறந்து வேறு ஒரு பெண்ணா

திரைப் படம்: முறை மாப்பிள்ளை (1995)
குரல்கள்: உண்ணி கிருஷ்ணன், சித்ரா
இசை: ஸ்வராஜ்
பாடல்: வாலி
இயக்கம்: சுந்தர் சி
நடிப்பு: அருண் குமார், கீர்த்திகா



உனை மறந்து வேறு ஒரு பெண்ணா
என் அன்பே நானா
உடல் பிரிந்து வாழும் ஒரு வாழ்வா
நீ இன்றி நானா
நிலவை விட்டு நீங்கிடாது வானம்
நாளும் பாடும் நெஞ்சம் உன் ராகம்


உனை மறந்து வாழும் இளம் பெண்ணா
என் அன்பே நானா
உயிர் பிரிந்து வாழும் ஒரு வாழ்வா
நீ இன்றி நானா


சீமை விட்டு சீமை வந்து வேறொருத்தி
யாரும் உன்னைத் தொடக் கூடாது
மேலை நாட்டு மாமன் இங்கு மாலை கட்டி வந்தால்
இந்தக் குயில் கூவாது
ஏன் இன்னும் சந்தேகம் எந்தன் கண்மணி
உன் சொந்தம் என்றென்றும் என்னை நம்பு நீ
உனகெனத்தான் பிறந்தேன் வளர்ந்தேன்
சொந்தம் நீதானே


உனை மறந்து வேறு ஒரு பெண்ணா
என் அன்பே நானா
உடல் பிரிந்து வாழும் ஒரு வாழ்வா
நீ இன்றி நானா


காதல் என்னும் மூன்றெழுத்தை வேதம் என்று நாளும்
உள்ளம் இங்கு ஓதாதோ
தூங்குகின்ற நேரம் இங்கு வாங்குகின்ற மூச்சும்
உந்தன் பெயர் கூறாதோ
ஒன்றல்ல ரெண்டல்ல எந்தன் ஆசைகள்
என்னென்று நான் சொல்ல நெஞ்சின் ஓசைகள்
கனி இதழ்கள் எடுத்தால் கொடுத்தால்
மோகம் தீராதோ


உனை மறந்து வாழும் இளம் பெண்ணா
என் அன்பே நானா
உயிர் பிரிந்து வாழும் ஒரு வாழ்வா
நீ இன்றி நானா
உனைத் தவிர வேறு ஏது எண்ணம்
வானம் பூமி யாவும் என் சொந்தம்

Unnai Kandhe

Movie:Dasarathan (1993)
Music : Vaidhyanathan

அதிகாலை நான் பாடும் பூபாளமே

படம்:புதுப்பாடகன்
பாடியவர்கள்:டாக்டர் எஸ்.பி.பி, சித்ரா
இசை எஸ்.தாணு
தயாரிப்பு:எஸ்.தாணு



அதிகாலை நான் பாடும் பூபாளமே
அது கேட்டு உன் நெஞ்சம் சுதி போடுமே

அதிகாலை நான் பாடும் பூபாளமே
அது கேட்டு உன் நெஞ்சம் சுதி போடுமே
சுகம் ராகம் தினம் பாடும்
செவிக்கூட தேனாகா பாயும்

அதிகாலை நான் பாடும் பூபாளமே
அது கேட்டு உன் நெஞ்சம் சுதி போடுமே

வான்மேகம் யாவும் வாழ்த்துக்கள் கூறும்

தனியாக நானே பரிமாறக்கூடும் ??

வான்மேகம் யாவும் வாழ்த்துக்கள் கூறும்

தனியாக நானே பரிமாறக்கூடும் ??

இளமங்கை பொன்மேனி நீராடி மகிழும்
இளமங்கை பொன்மேனி நீராடி மகிழும்

இதுபோல நாளும் இனிதாக வேண்டும்

அதிகாலை நீ பாடும் பூபாளமே
அது கேட்டு என் நெஞ்சம் சுதி போடுமே
சுகம் ராகம் தினம் பாடும்
செவிக்கூட தேனாகா பாயும்
அதிகாலை நீ பாடும் பூபாளமே
அது கேட்டு என் நெஞ்சம் சுதி போடுமே

மஹராணி எந்தன் மடி சாயும் நேரம்
மணிமாலை பார்வை மலர் அம்பு பாயும்??
மஹராணி எந்தன் மடி சாயும் நேரம்
மணிமாலை பார்வை மலர் அம்பு பாயும்??

பூவிறித்த மஞ்சம் வஞ்சி இவள் நெஞ்சம்
பூவிறித்த மஞ்சம் வஞ்சி இவள் நெஞ்சம்

ஏழேழு ஜன்மம் இது மாறாத சொந்தம்

அதிகாலை நான் பாடும் பூபாளமே
அது கேட்டு உன் நெஞ்சம் சுதி போடுமே
சுகம் ராகம் தினம் பாடும்
செவிக்கூட தேனாகா பாயும்

அதிகாலை நான் பாடும் பூபாளமே
அது கேட்டு நம் நெஞ்சம் சுதி போடுமே

Sunday, March 18, 2012

தோள் மீது தாலாட்ட



என் தங்கை கல்யாணி (1983) படத்தில் டிஆர் இசையில் பாலுவும் சித்ராவும் பாடியிருக்கும் இந்த அழகான தாலாட்டுப் பாடலைக் கேட்போமா?





தோள் மீது தாலாட்ட
என் பச்சக் கிளி நீ தூங்கு
தாய் போலத் தாலாட்ட
என் தங்கமே நீ தூங்கு
நிலவக் கேட்டா புடிச்சுத் தருவேன் மாமன்
உலகக் கேட்டா வாங்கித் தருவேன் மாமன்

தோள் மீது தாலாட்ட
என் பச்சக் கிளி நீ தூங்கு
தாய் போலத் தாலாட்ட
என் தங்கமே நீ தூங்கு

மண்ணுக் குதிர அவென நம்பி
வாழ்க்கையென்னும் ஆத்தில் இறங்க
அம்மா நெனச்சாடா
உன் மாமன் தடுத்தேன்டா
வார்த்தை மீறி போனாப் பாரு ஓ..
வார்த்தை மீறி போனாப் பாரு ஓ..
வாழ்க்கை தவறி நின்னா கேளு
மனசு பொறுக்கலடா
என் மானம் தடுக்குதடா

தங்க ரதமே தூங்காயோ
தாழம் மடலே தூங்காயோ
முத்துச் சரமே தூங்காயோ
முல்லைவனமே தூங்காயோ

நெருப்பு தொட்டா சுடுமே என்று
சின்ன வயதில் அண்ணன் தடுக்கும்
மீறித் தொட்டேன் நான்
கதறி அழுதேன் நான்
ஓடிவந்து அண்ணன் பாக்கும் ஓ
ஓடிவந்து அண்ணன் பாக்கும்

தவற மறந்து மருந்து போடும்
இப்போ நெருக்கத்துக்கு அத
பாக்க யாரும் இல்லை

தோள் மீது தாலாட்ட
என் பச்சக் கிளி நீ தூங்கு
தாய் நெஞ்சம் தாலாட்ட
என் தங்கமே நீ தூங்கு

நிலவக் கேட்டா புடிச்சுத் தருவேன் மாமன்
உலகக் கேட்டா வாங்கித் தருவேன் மாமன்

தங்க ரதமே தூங்காயோ
தாழம் மடலே தூங்காயோ
முத்துச் சரமே தூங்காயோ
முல்லைவனமே தூங்காயோ

ஆரிராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆரிராரோ

ஒரு சின்னப்பறவை

Saturday, March 17, 2012

நினைப்பது நிறைவேறும்

நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு...


நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு...

நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு...

நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..

இருவரும் சேர்ந்திருந்தால் அன்போடு..

இன்றுபோல் வாழ்ந்திடலாம் பண்போடு..

நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு..

நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..



ஒருவரின் இதயத்தில் ஒருவர் குடியிருந்தால்..

ஒருவரில் இருவரையும் ஓருடலாய் கண்டிடலாம்..

ஒருவரின் இதயத்தில் ஒருவர் குடியிருந்தால்..

ஒருவரில் இருவரையும் ஓருடலாய் கண்டிடலாம்..

தனிமை உனக்கேது...தாங்கும் இதயம் எனக்கேது..

தனிமை உனக்கேது...தாங்கும் இதயம் எனக்கேது..

உலகத்தை மறந்து வந்து உறவு சொல்லி விளையாடு..

உலகத்தை மறந்து வந்து உறவு சொல்லி விளையாடு..



நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு..

நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..

நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு..

நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..



தேன் சுவைத்தமிழ் பேசி தெம்மாங்கு இசைபாடி..

இருவரும் பெருமையுடன் இன்பமெல்லாம் கண்டிடலாம்..

தேன் சுவைத்தமிழ் பேசி தெம்மாங்கு இசைபாடி..

இருவரும் பெருமையுடன் இன்பமெல்லாம் கண்டிடலாம்..

காதல் கவிபாடு...காலமெல்லாம் உறவாடு..

காதல் கவிபாடு...காலமெல்லாம் உறவாடு..

மனதை பறிகொடுத்தேன் மறந்து வாழ முடியாது..

மனதை பறிகொடுத்தேன் மறந்து வாழ முடியாது..



நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு..

நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..

இருவரும் சேர்ந்திருந்தால் அன்போடு..

இன்றுபோல் வாழ்ந்திடலாம் பண்போடு..

நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு..

நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..



படம்: நினைப்பது நிறைவேறும்

குரல்கள்: M.L ஸ்ரீகாந்த், வாணி ஜெயராம்

இசை: M.L.ஸ்ரீகாந்த்

பாடல்: மணி